Pages

Friday, September 6, 2019

எம் பள்ளி அறிவியல் ஆசிரியரின் தமிழ் படைப்புகள்

ஏற்றிவிடும் ஏணி...

கரை சேர்க்கும் தோணி...

வழிகாட்டும் கை விளக்கு...

செடி வளர்க்கும் தோட்டக்காரன்...

உளி எடுக்காது சிலை கொணரும் சிற்பி...

உள்ளத்து எண்ணம் பள்ளம் தாண்டி வெளிக்கொணரும் கள்வன்...

நடிப்பதில் சிவாஜி...

நகைச்சுவையில்  நாகேஷ்...

பழங்கதை கதைத்துப் பயனுண்டோ...

வரிகளைப் படிக்க வாத்தியார் எதற்கு...

ஏட்டைப் படிப்பதா இத்தனை சிரமம்...

கற்றிட வழி நீர் காட்டித் தெரியும்...

எண்ணெயின்றி ஒரு தலை...

காலை உணவுண்ணா ஒரு பிள்ளை...

கண்ணீரோடு ஒன்று...

கேட்டால் கலங்கிடக் கதை சொல்லும்...

எத்தனை துயரப் பின்னணிகள்...

எல்லோருமா அப்துல் கலாம்...
எல்லோருமா  இராதாகிருஷ்ணன்....

மயல்சாமி  அண்ணாத்துரையும்

மற்றைய உயர்நிலை அறிஞர்களும்...

ஆட்சிப் பணிப்படிப்பு பூர்த்தி செய்த அத்தனை பெரியவரும்...

திரும்பிப் பார்த்து திறம் பட உரைக்கும்  ஓர் நபர்  ஆசிரியரே...

அந்த ஒற்றைச் சொல்லே  ஆயிரம் விருதுகளை  ....

அவர்  வசம் சேர்க்கும்.....

விருதுக்காகவா  அவருழைத்தார்...

கடமை கண்ணாய் அவர் செய்தார்...

நாட்டுப் பற்றை வளர்த்திடவே...

தியாகக் கதைகள் பல சொல்லி...

பஞ்சு மனது பதமாக...

பிஞ்சில் நெஞ்சு பதிந்திடவும்...

நீதிக் கதைகள் வேளையினில்...

நியாயம்  வெல்லும் என்றுரைத்து...

உழைப்பால் உயரும் நிலைதனையும்...

பாடம் மட்டும் பகராது...

பலவித அனுபவம் பயிற்றுவித்து....

பள்ளியில் பசுமைத் தோட்டம் வைத்து...

பழகும்  தாவரம் பயனுரைத்து...

நிலவும்  வெம்மை அது நீங்க ...

நிம்மதி தரும் வரம் அதுவாக...

மொட்டு மெதுவாய்க் கட்டவிழ...

இதழ்கள் விரிந்து மலராக...

பாடம் புகட்ட மலரொன்றை...

பாங்குடன் காம்புடன் தான் கொணர்ந்து...

புல்லி அல்லி மகரந்தம் ...

சூலகச் சூசகம் தானுரைத்து....

வளரும்  நெஞ்சில் அனுபவத்தை....

வளர்த்து விடுவதவர் பணியாகும்...

ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளோடு 
நின்று விடாமல்...

பகுத்தல் தொகுத்தல் 
பிரித்தல்  ஆய்தல் ...

காத்திருத்தல் உற்று நோக்கல்  படைத்தல்..

என்று மொழியிலும் எண்ணிலும் மும்மரமாய்...

ஆடவும் ஓடவும் அறிவொளி வீசவும்...

விண்ணில் மிதந்திட விதைதூ  விடவும்...

கையெழுத்து மாற்றி
உரைகளைத் தரவும்...

முப்படை காப்பதை முத்தாய்ப்பாய்க் கூறவும்...

வீர மரணங்கள்  வீழ்வல்ல வாழ்வென்றும்...
 
இந்தியன் என்ற உணர்வதை  விதைக்கவும்...

வான்வழிப் படையினில் வளியினைக் கிழித்து...

பகை முகாம் ஒழித்து மீண்டிடும் வேளை...

எதிரியின் ஏவலால் பாய்ந்திட்ட கணையொன்று...

அர்ச்சுன அபிநந்தன் தட்டானில் மோதிட...

தனி மனிதனல்ல தமையன் அபிநந்தன்...

இந்திய  மக்களின் இணையில்லா பிரதிநிதி...

நாடகமல்ல  நாட்டின் பாதுகாப்பு...

இடையிடை வேளையில் விளம்பரம் போட...

பருவ காலத்தில் பெய்திடும் மழையை...

பாங்காய்ப் பயன்தர போட்டிடும் திட்டங்கள்...

மருத்துவம் சட்டம் காவலென்  றனைத்தும்...

தீர்ப்பும்  வாதமும்   திருத்தங்கள் மேற்கொள்ள...

அறியும் வழியும் அளித்தவன் ஆசான்...

ஆசான் ஏணி ஏற்றியே விடுவான்...

பிறர் ஏற்றத்தில் என்றும் பொறாமை கொள்ளான்...

இன்றைய மாணவர் நாளைய பாரதம்...

நாளைய பாரதம் நன்றாய் இருக்க...

இன்றே உழைத்திடும்
எம்மினம் வாழ்க...

வாழ்த்திட்ட நெஞ்சும் வளமோடு வாழ்க...